பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 48. வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

47?

472

473

474

475

476

477

478

479

480