பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 54. பொச்சாவாமை

இறந்த வெகுளியில் தீதே சிறந்த உவமை மகிழ்ச்சியிற் சோர்வு. $3}

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. 532

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுவுலகத்து எப்பானு லோர்க்குந் துணிவு. 533

அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு 534

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். 535

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில் $36

அரியவென் றாகாத இல்லை பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின், 537

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல், 538

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின். 540