இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
119 56. கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற் அல்லவை செய்தொழுகும் வேந்து (கொண்டு 551
வேலொடு நின்றான் இடுவென்றதுபோலும் கோலொடு நின்றான் இரவு 5S2
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். 553
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. 554
அல்லற்பட் டாற்றாது அழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை S55
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. 556
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு SS7
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின், 558
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல், S59
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவான் எனின். 560