பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 21 57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து 56]

கடிதொச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். 562

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். S64

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து. 56S

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். 566

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் 567

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகுந் திரு. 568

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். S69

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. S70