பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 65. சொல்வன்மை

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளது உம் அன்று. 54}

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. 642

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். 643

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினுஉங்கு இல், 644

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். 646

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றாதவர். 649

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். 650

6. திரு-எண்6