இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
227 109. தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. 108}
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. 1082
பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். 1084
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 1085
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்களுர் செய்யல மன்இவள் கண். 1086
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில், 1087
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்யினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. 1088
பிணையேர் மடநோக்கும் நானும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து, 1089
உண்டார்கண் அல்லது அடுதறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090)