இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
251 121. நினைந்தவர் புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. 120?
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல், 1202
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். 1203
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஒஒ உளரே அவர். 1204
தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத் தோவா வரல் 1205
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன். 1206
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். 1207
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. 1208
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. 1209
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி: 1210