பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 22

இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும். 8! விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான்மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று. 82 நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்று கிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும். 83 முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள். 84 விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிற வனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ? 85

செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர் பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். 86 விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும். 87 பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது தாம் பற்றில்லாதவர் என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்! 88 பொருள் உடைமையுள்ளும் இல்லாமை என்பது, விருந் தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும். 89 அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள். 90