இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55 25. அருள் உடைமை
அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பூரியார் கண்ணும் உள. (பொருட்செல்வம் 241
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை. 242
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் 243
மன்னுயிர் ஒம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. 244
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. 245
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். 246
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இவ்வுலகம் இல்லாகி யாங்கு. இல்லார்க்கு 247
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. 248
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 249
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 25()