பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
X


“நடுநிலைமை’ பற்றி விளக்குமிடத்துத் “தவறான வழியில் பொருளை ஈட்டி, அவர்கள் சலவைக்கல் பதித்து வீடு கட்டி இருந்தாலும் அவர்களை வெளுத்துக் கட்டாமல் இருக்கமாட்டார்கள்” இஃது அவர் தொடர்; ‘உலகம் அவர்களை விடாது” என்ற கருத்தில் கூறுகிறார்.

‘சலவை’ ‘வெளுத்தல்’ என்ற வார்த்தைகள் ஒரு சுகமான அர்த்தத்தை உண்டாக்குகின்றன.

“அளவோடு உண்பது வளமான வாழ்வுக்கு வழி வகுக்கும்” - இது ரா.சீ யின் சுவையான வரிகள்.

இப்படி நூல் முழுக்க எங்கு நோக்கினும் திருக்குறளின் கருத்துகள் சுவையான தமிழில் அழகுற எழுதப்பட்டுள்ளன.

வெறும் பொழிப்புரையாக இல்லாமல், சுவையான செய்திகள், நல்ல நண்பரின் அன்பான அனுசரனணயான புத்திமதிபோல் எழுதப்பட்டுள்ளன.

‘திருக்குறள்’ பற்றி முழுதுமாக அறிந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பும் பலர், பல புத்தகங்களைப் பாதியிலே விட்டுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், ‘திருக்குறள்செய்திகள்’ எனனும் நூல்சுவையானது; நூலைப் படிக்கத் தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை இது சுகமானது.

இஃது அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்.

அன்பன்,
மதுநெஞ்சன்

1048, கடத்தூர்ச் சாலை,
கணியூர் - 638 203