இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைவி கூற்று
“உள்ளம் உடைந்து சிதைந்துவிட்ட பிறகு அவர் வந்தால் என்ன? கலந்தால் என்ன? உடைந்த பானை கூடவா போகிறது?”
தலைவி கூற்று
“நீ பேசத் தேவை இல்லை; கண்கள் உன் மனக் கருத்தை உரைக்கும்.”
தலைவன் கூற்று
“கண்ணுக்கு இனியவள்; மூங்கில் போன்ற தோளை உடையவள்; இளநங்கை; அவள் பெண்மை என்னைக் கவர்கிறது.”
“மணிக்கு உள்ளே நூல் இழை ஓடுகிறது; அவள் அழகில் கவர்ச்சிக் குறிப்பு ஒன்று உண்டு.”
“அரும்பாத முகைக்குள் நாற்றம் அடங்கி இருக்கிறது; நகைக்காத முறுவலில் ஒரு மனக்குறிப்பு உண்டு; அஃது அவள் காதற் குறிப்பு ஆகும்.”
“அவள் காட்டிய கள்ளக் குறிப்பு என் காதல் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.”
தலைவி கூற்று
“இனியது பேசி ஆறுதல் கூறி அணைத்து மகிழ்ந்தார்; பிரிவுப் பயணத்துக்கு அஃது அச்சாரம் ஆகும்.”