பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் நலம் புனைந்துரைத்தல் அனிச்சப்பூவே நற்பண்பு உடையாய் வாழ்க: என் காதலி உன்னைவிட மென்மையள். நான்ஒருவன் பார்க்கும் இவள்கண், மனமே! பலர்பார்க்கும் மலர் ஒக்குமென மயங்குகிறாய். மூங்கில் போலும் தோளிக்குத் தளிரே மேனி முத்தே பல், மலரே மணம், வேலே கண். குவளைகள் இவள் கண்ணைக் காண நேர்ந்தால் உவமையாகோம் என்று தலைசாய்த்துக் குனியும். ஒர் அனிச்சமலரைக் காம்புடன் சூடினாள்; . இவள்இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. வானவட்டத்துச் சுழன்றுதிரியும் விண்மீன்கள் இது திங்கள் இது மாதர் முகம் என அறியா. குறைந்து நிறையும் திங்களுக்குப் போலக் காதலி முகத்தில் களங்கம் உண்டோ? என்காதலி முகம்போல ஒளிவிட முடியின் திங்களே! நீயும் என்காதலுக்கு உரியை. மலர் கண்ணாளின் முகம்போல் ஆகவிரும்பின் திங்களே! பலர் பார்க்கத் தோன்றாதே. அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடிக்கு நெருஞ்சி முள். - 228 1111 1112 1 113 1114 111s 1 116 1 117 11 i 8 1 119 1120 களவியல் - அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னிரள் யாம்வீழ் பவள் fff மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. 1112 றிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1113 காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்ல்ேம் என்று. 1114 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. - 1115 மதியும் மடந்தை முகனும் அறியா கலங்கிய மீன். 1116 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. 1117 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. - மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 1118 பலர்காணத் தோன்றல் மதி. 1119 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். neo 229