பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் ஊடலுவகை அவரிடம் ஒரு தவறும் இல்லை யாயினும் ஊடல் அவரைப் பேரன்பு கொள்ளச் செய்யும். 182, ஊடலால் சிறுபொழுது தோன்றும் வெறுப்பு அவரன்பை வருத்தினும் பெருமைக்கு உரியது. 1322 மண்ணோடு நீர் குழைந்தாற்போன்ற காதலரிடம் ஊடுதலைவிடத் தேவருலகம் இன்பமானதோ? 132; காதலரை உடனே தழுவிவிடாத ஊடலில் என் நிறையை உடைக்கும் படை பிறக்கின்றது. 1324 தவறில்லை யாயினும் தன்காதலியின் தோளைச் சிறிது பிரிந்திருத்தலில் ஓரின்பம் உண்டு. 1325 உண்பதைவிட உண்டது. செரித்தல் இன்பம்: காமம் சேர்தலைவிடப் பிணங்குதல் இன்பம். 1326 ஊடலில் தோல்விப்பட்டவரே வென்றவர்; அவ்வுண்மை கூடுஞ் செய்கையில் விளங்கும். 1321 நெற்றி வேர்க்கப் புணர்ந்த இனிமையை இன்னும் ஒருமுறை ஊடிப் பெறுவேனோ? 1328 காதலி மேன்மேலும் ஊடுக. நான் வேண்ட இரவு நேரம் மேன்மேலும் நீளுக. 1329 காமவுணர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்: கடித் தழுவுவதே அதற்குப் பேரின்பம், 1330 270 கற்பியல் அதிகாரம் 133 . ஊடலுவகை இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு: 货321 ஊடலில் ತ್ಗಲ್ಲ! சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும். 1322 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. - 1323 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை 1324 தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலி னாங்கொன்று உடைத்து. 1325 உணலினும் உண்டது_ஆறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1326 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். - 1327 ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. 1328 ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. 1329 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். 1330 271