பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

fக ரை) நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கி விடும்.

6. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன் எனல்

மக்கட் பதடி எனல்.

(ப-ரை) பயன் - நற்பயன், இல் - இல்லாத, சொல் . சொற்களை, பாராட்டுவானை - பாராட்டிப் பன்முறை பேசுபவனை, மகன் எனல் - மனிதன் என்று கூறாதே, மக்கள் . மக்களுக்குள்ளே, பதடி - பதர், எனல் என்று கூறுவாயாக.

(கரை) பயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் பேசுபவனை மனிதன் என்று கூறாதே; மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக.

7. கயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயன்இல சொல்லாமை கன்று.

|ப-ரை) நயன் - நீதியோடு, இல . சேராத சொற் களை, சான்றோர் - அறிவு நிறைந்த பெரியோர்கள், சொல்வினும் - சொன்னாலும்கூட, சொல்லுக - சொல் வாtகளாக, பயன் - யாதொரு பயனும், இல . இல்லாத சொற்களை, சொல்லாமை நன்று - சொல்லாதிருத்தல் மிகவும் நல்லதாகும்.

(கரை) சான்றோர்கள், நயமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுவார்களாக; பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாகும்.

8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்,

(ப-ரை) அரும் - அறிதற்கு அருமையான, பயன் - பயனாக உள்ளவைகளை, ஆயும் - ஆராய்கின்ற, அறிவினார் . அறிவினையுடைய பெரியார்கள், பெரும்.