பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

வாழ்கின்றது, எல்லாம் . எல்லாம். விருந்து - விருந்தினரை, ஒம்பி - போற்றிப் பே னிை, வேளாண்மை - உதவியை, செய்தல் - செய்யும், பொருட்டு - காரணத்திற்கேயாகும்.

(க-ரை) இல்வாழ்க்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்தற் பொருட்டேயாகும்.

2. விருந்து புறத்ததாத் தான்.உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று,

(ப-ரை) சாவா - சாவினைத் தராத, மருந்து . மருந்து, எனினும் - என்றாலும், விருந்து - விருந்தினர், புறத்ததா. தனது இல்லத்தின் புறத்தில் இருக்க, தான் - தான் மட்டும், உண்டல் - சாப்பிடுதல், வேண்டற்பாற்றன்று விரும்பும் தன்மையான முறையாகாது.

(கரை வந்த விருந்தினரை இல்லத்தில் புறத்தே இருக்கவைத்து, சாவினைத் தராத மருந்தாக இருந்தாலும், தான் மட்டும் சாப்பிடுதல் முறைமையுடையதாகாது.

3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று. (ப.ரை) வருவிருத்து - வந்த விருந்தினரை, வைகலும் . நாள் தோறும், ஒம்புவான் வாழ்க்கை - போற்றுபவனுடைய இல்லற வாழ்க்கை, பருவந்து - துன்புறுத்தும் வறுமையால், பாழ்படுதல் - பாழாகி விடுதல், இன்று - இல்லை. -

(க.ரை வந்த விருந்தினரை நாள்தோறும் போற்று பவனுடைய இல் வாழ்க்கையானது வறுமையால் துன்புற்று கெடுவது இல்லையாகும். - *

4. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து

கல்விருந்து ஓம்புவான் இல்.

(ப-ரை) முகம் - முகம், அமர்ந்து - மகிழ்ந்து, நல் விருந்து - தகுதியுடைய விருந்தினரை, ஒம்புவான் பேணிப்