பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 6 அதிகாரம் 3 நீத்தார் பெருமை 21. ஒழுக்க நெறியில் நிலையாக நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவது நூல்களின் துணிவு, 22. பற்றுகளை விட்டவர்களின் பெருமையை அளந்து கூறுதல் உலகில் இதுகாறும் பிறந்து இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றது. 23. பிறப்பு வீடுபேறு இவற்றின் துன்பு இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து இப்பிறப்பில் துறவறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்து விளங்குவது. 24. அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவனே மேலான வீட்டுலகிற்கு வித்து போன்றவன், 25. ஐம்பொறிவழியாக எழும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு வானுலகக் கோமானாகிய இந்திரனே போதுமான சான்றாவான். 28. செய்வதற்கு அரியதாயவற்றைச் செய்பவர் பெரியோர், செய்வதற்கு அரிதாயவற்றைச் செய்யமாட்டாதவர் சிறியோர். 21. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவிற்குள் உள்ளது உலகம். 28. பயன்நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை உலகில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். 29. நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரி யோரின் சினம் சிறுபொழுதே என்றாலும் அதன் விளைவை எவராலும் தாங்குதல் அரியதாகும். 30. எவ்வகைப்பட்ட உயிர்களிடத்திலும் செம்மையான அருளைமேற்கொண்டு ஒழுகுவதால் அந்தணர் என்போரே அறவோர் ஆவர்.