பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பொருள் 66. வினைத்துாய்மை துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். 651 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. - 652 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். 653 இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். 654 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. 655 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. . 656 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. 657 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். . 658 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. 659 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. 66O