108
12. மெய்யுணர்தல்.
351. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.
(இ-ள்) மெய் முதலாகிய பொறிகளைந்தினாலும் அறியப் ப டுவன வெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான்
ஒரு பயனுண் டாகாது, உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு,
(எ-று) .
இது, மெய்யுணர்தல் வேண்டும் என்றது. 1
352. பொருளல்ல வற்றைப் பொனென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.
(இ-ள்) பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம், மாட்சிமையில்லாத பிறப்பு, (எ-று)
இது மெய்யுணருங்கால் மயங்கக் காண்பனாயின்,
பிறப்புண் டாமென்றது.
2
353. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்1ொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(இ-ள்) யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயிருப் பினும், அப்பொருளினுடைய வுண்மைத் தன்மையைக் காண்பது யாதொன்று அஃது அறிவாம், \எ-று).
மெய்யென்பது உம் அறிவென்பது உம் ஒன்று; என்னை? எக் காலத்தும் ஒரு தன்மையாய் அழிவின்றி நிற்றலின், மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால், அறிவாயிற்று.
இவை மூன்றினானும் உலகத்துத் தோற்றுகின்ற பொருள் களை இந்திரியங்களாற் கண்டு அதன்பின் அப்பொருள்களைக் கண்டவாற்றால் தெளியாது அவையிற்றினது உண்மையைப் போக் கறவாராய்ந்து காண்பது மெய்யென்று கூறப்பட்டது. 3
354. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.