202
4. வினைத்திட்பம்
(இ-ள்) வினை செய்யுங்கால் உறும் துன்பத்தை ஒாார் ஆத லும் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறி யென்று சொல்லுவர்கள் வினையை எண்ணின வர்கள் செய்து முடிக் கும் கோட்பாடு. மனத்திட்பமாவது யாது என்றவர்க்கு அஃது இரண்டுவகைப்படும் என்று கூறிற்று. 4
665. சொல்லுதல் பார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.
(இ-ள்) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லு தல் யாவர்க்கும் எளியவாம்; அதனைச் சொல்லிய வாற்றால்
செய்து முடித்தல் யாவர்க்கும் அரிய வாம், (எ-று).
மேற்கூறிய இருவகையினும், ஊறு,ஓராது செயலின் வகை
கூறுவார், முற்படச் சொல்லியவாறு செய்ய வேண்டும் என்று கூறி னார். 5
666. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தரக்கங் கடித்து செயல்.
(இ-ஸ்) கலக்கமின்றி ஆராய்ந்து கண்ட வினையிடத்துப் பின் னைத் துளக்கமின்றி, அதனை நீட்டியாது செய்க, (எ-று).
இது, விரை ந்து செய்யவேண்டுமென்றது.
6 67. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்சி
னெற்றா விழுமத் தரும்.
(இ-ள்) ஒரு வினையைத் தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும், (எ-று).
சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது, தொடங்கின வினையை முடியச் செய்ய வேண்டுமென்றது. - 7
668. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின் பம் பயக்கும் வினை.