258
2. புல்லறிவாண்மை
844. காணாதாற் காட்டுவான் றான்காணான் கானா தான்
கண்டானாந் தான் கண்ட வாறு.
(இ-ள்) அறியாதானை அறிவிக்கப் புகுவான் தானறியானா கும் அவ்வறியாதவன் தான் அறிந்தபடியே அறிந்திருக்கு மாத
ல ன். (எ-று).
இது, கொண்டது விடாமை புல்லறி வென்றது.
845. அற்ற மறைத் தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி.
(இ-ள்) தம்மாட்டுள்ள குற்றத்தைப் பிறரறியாமை மறைத்த காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடை யான் மறைத்தல் புல்லறிவு, (எ-று) .
எனவே . அதுவும் மறையானாயின், குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறி வென்றது. 5
84 ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னன்வுயிர்
போஒ மளவு மோர் தோய்.
(இ-ள்) அறிவுடையார் சொல்லவும்தான் செய்யான்; (தானும்
தெளியான்;) அத்தன். மயானாகிய சீவன் போல வம் உலகத்
தாக்கு ஒரு நோயைப் போல்வான். (எ-று).
எவுதல்-தான் தெரிய என்று ஏவுதல். தெளிதல் பொருள்
யாதொன்று தெளிதல். இஃது, ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யா மை புல்லறி வென்றது. வேறு செய்யும் வினைக்கும் ஒக்கும். 6
847 அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் றவம்.
(இ-ன்) அறிவிலா தா ன் மகிழ்ந்து கொடுத்தற்குக் காரணம்
வேறொன்றும் இல்லை; அப்பொருளைப் பெறுகின்றவன் நல்வினைப்
பயன (எ - று