சோழநாடு 135 கத்தரச் பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றுஆய பெருமானே! மற்று.ஆரை உடையேன்? உண்மயத்த உமக்குஅடியேன் குறைதிர்க்க வேண்டும்: ஒளிமுத்தம் பூண்ஆரம் ஒண்பட்டும் பூவும் கண்மயத்த கத்துசரி கமழ்சாத்தும் வேண்டும். கடல்நாகைக் காரோனம் மேவிஇருந் திர்என்று அண்மயத்தால் அணிதாவல் ஆரூரன் சொன்ன அரும்தமிழ்கன் இவைவல்லார் அமர்.உலகுஆள்பவரே! சேக்கிழார் மன்னி நீடிய செங்கதி ரவன்வழி மரபின் தொன்மை யாம்முதல் சோழர்தம் திருக்குலத்து உரிமைப் பொன்னி நாடுஎனும் கற்பகப் பூங்கொடி மலர்போல் நன்மை சான்றது. நாகப்பட் டடினத்திரு நகரம். 146. சிக்கல் வெண்ணெய்நாதர்-வேல்நெடுங்கண்ணி சம்பத்தர் : 1. வழிபட்டநாள் 1-2-58, 11-3-65. நாகப்பட்டினத்துக்கு மேற்கு 3 கல் தொலைவு. இரயில் நிலையம் இறைவன்கட்டுமலைமேல்வீற்றிருக்கின்றார். இங்கே அழகே வடிவமாக வீற்றிருக்கின்ற சிங்காரவேலர் சன்னிதி மிக்க சிறப்புடையது. கோவில் பெரியது. தங்க வாகனங்கள் நிறைய இருக்கின்றன. கோவிலுக்குள் வடபக்கத்தில் கோல வாமனப்பெருமாள் சன்னிதி இருக்கின்றது. சம்பந்தர் கந்தம்முந் தக்கைதை பூத்து.க மழ்ந்துசே ரும்பொழில் செந்துவண் டின்இசை பாடல்மல் கும்திகழ் சிக்கலுள் வெந்தவெண் aற்று,அண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரையார்கழல் சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.