பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருத்தலப்பயணம் இக்கோயிலுக்கு எதிரில் அன்பிலாலந்துறை என்ற தேவாரக் கோயில் இருக்கிறது. திருமழிசையாழ்வார் நாகத்து அணை,குடந்தை, வெஃகா திருஎவ்வுள். நாகத்து அணைஅரங்கம், பேர். அன்பில்-நாகத்து அணைப்பாற் கடல்.கிடக்கும் ஆதி நெடுமால், அணைப்பார் கருத்தனா வான். 5. உத்தமர்கோயில் (கரம்பனூர்) . புருடோத்தமன்-பூர்வாதேவி வழிபட்டநாள் : 16-3-56, 11-1-66. திருமங்கையாழ்வார் 1 திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் கொள்ளிட ஆறு கடந்து, சிறிது தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருச்சி-விழுப்புரம் குறுக்கு வழி இருப்புப் பாதையில் உள்ள பூரீரங்கத்திற்கு அடுத்த இரயில் நிலையம். கிடந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இக் கோவிலினுள் சிவன் கோவிலும், பிரமனுக்கு ஒரு கோயிலும் இருக்கின்றன. திருமங்கையாழ்வார் பேரானை. குறுங்குடிஎம் பெருமானை. திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை. முத்துஇலங்கு காரார்திண் கடல்ஏழு. மலைஏழுஇவ் உலகேழுஉண்டும். ஆராதுஎன்று இருந்தானைக் கண்டது.தென் அரங்கத்தே.