பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 திருத்தலப்பயணம் புலவர்கள் பாராட்டுதலிலும் திருவேங்கடமுடையார் ஒன்றும் குறைந்தவரல்லர். ஏராளமான பாடற் செல்வத்தையும் பெற்றவர் அவர். திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில், தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர, பத்து ஆழ்வார்கள் திருவேங்கடத்தைப் பாடியுள்ளனர். திருவரங்கத்தைப் பதினொரு ஆழ்வாரும் பாடினர். திவ்வியப் பிரபந்தப்பாடற் பெருக்கத்திலும் திருவரங்கம் முதல் இடத்தையும், திருப்பதி இரண்டாவது இடத்தையும் பெறுகின்றன. திருவரங்கத்திற்கு 247. திருப்பதிக்கு 203. . மலையின் மீது பயணிகள் தங்குதற்கு ஏராளமான விடுதிகள் கட்டப் பெற்றிருக்கின்றன. எல்லா வசதிகளும் மலையில் இருக்கின்றன. - மலையின் மீது திருவேங்கடமுடையார் மட்டும்தான் நிற்கின்றார். தாயார் சந்நிதி அங்கு இல்லை. அடிவாரத்தினின்றும் இரண்டு கல் தொலைவிலுள்ள திருச்சானூரில் அலர்மேல்மங்கைத் தாயார் சந்நிதி இருக்கிறது. அடிவாரத்திலுள்ள கிழைத் திருப்பதியில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் இருக்கிறது. இராமர் கோவில் ஒன்றும் இருக்கிறது. திருமலையில் கண்ணாடி மாளிகை ஒன்று அமைக்கப் பெற்றிருக்கிறது. நிறைந்த பொருட் செலவில் கவர்ச்சிகரமாக அம்மாளிகை விளங்குகிறது. திருவேங்கடமுடையானை அம் மாளிகையினுள் எழுந்தருளச் செய்து, கண்டு களித்தால், எங்கு திரும்பினாலும் எத்தனையோ வேங்கடநாதனைக் காணலாம். மலையின் ஒர் புறத்தில் பாபநாசம் அருவி என்று நீர் வீழ்ச்சி ஒன்று விழுகிறது.