பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன * 97



ஆசைப்பட்டவர் அவர். இப்பொழுது அந்தத் தவத்தின் புனிதம், கமலாட்சியைப் பற்றிய சில கணப்பொழுதின் சலனம் காரணமாகக் களங்கம் அடைந்துவிட்டிருக்குமோ என்று பதைபதைத்தார். வாழ்வின் ஆதரிசத்தைக் குறியாக்கி வழிப்பயணத்தைத் தொடர்ந்து வரும் அவர், மாண்புமிக்க ஒரு பொக்கிஷத்தை, இம்மாதிரியான மனச் சலனத்திற்குக் கொத்தடிமையாகி, எங்கேனும் இழந்துவிட நேரிட்டுவிடுமோ என்று தவியாகத் தவித்தார். கண்கள் குளமாயின. "என் வாணிக்குத் துரோகம் செய்து விட்டேனோ? ஊஹூம், இல்லை! மனித வாழ்விலே சாதாரணமாகக் காணக் கொடுதது வைக்காத அந்தத் தெய்வீக செளந்தர்யத்தைத் தரிசித்ததும், என்னை நான் இழந்துவிட்டேன். எல்லாம் என்னுள்ளே வளர்ந்திருக்கும் கலையார்வத்தின் விளைவுதான் ! கமலாட்சியின் படத்தைப் பார்த்த போதுகூட, என்னுள் வாழ்ந்த வாணியைத்தானே நான் நாளும் பொழுதும் பார்த்துக்கொண்டிருந்தேன்! ஆம்; மெய்தான். நாளை என் வாணியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு அவளை என் மனைவியாக்கிக் கொள்ளப்போகிறேன்"

மண்டை வலி கூடியது.

நெஞ்சுக் கனம் கம்மிப்படவில்லை.

சாய்வு நாற்காலியில் நன்றாக முதுகைச் சாய்த்துக் கொண்டு கால்களை நீட்டி. 'அம்மாடி!' என்று ஒரு முறை கொட்டாவி விட்டு விட்டு, கண்களை மூடிய பொழுதில், மானசீகமாகத் தோன்றிய வாணியின் அழகைத் தன்வயப்படுத்தி ரசித்தார் அவர். நரம்புகள் புடைத்தன. உடலில் இனம் மட்டுப்படாத ஊறல் ஏற்பட்டது. உடம்பு சுட்டது.

'வாணியின் வாழ்வில் ஏதோ சில உண்மைகள்

இருக்க வேண்டும். அவற்றைச் சந்தர்ப்பம் பார்த்து

தி.சொ.நி.-7