பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருமுருகாற்றுப்படை விளக்கம் பிழம்பாக விளங்குகின்ற அணங்கினருக்கு ஆனந்தம் மேலிடுகிறது. பொதுவாக மகளிர்களுக்கு அலங்காரம் என்ருல் மிக்க விருப்பம், தேவ மகளிரைப்பற்றிச் சொல் வானேன்? அழகில் சிறந்த அவர்கள் அலங்காரத்தில் சிறந்து விற்க வேண்டுமென்று விரும்புகிருர்கள். தங்கள் அழகை மிகுத்துக் காட்டும் மலரலங்காரத்தைப் பெறு வதற்கு வேறு கிலம் இன்மையின் இந்தக் குறிஞ்சி கிலத் திற்கு வந்து இங்கே கிடைக்கும் பல வகை மலர்களேத் தொகுத்துத் தங்களைப் புனைந்துகொள்கின்ருர்கள். இப் போது அவர்கள் உள்ள கிறைவு பெற்று விளங்குகிருர் கள். இத்தகைய மலர்களே எப்போதும் விளைவிக்கும் குறிஞ்சியின் வளம் அவர்கள் உள்ளத்தை அள்ளுகிறது. அவர்கள் அறிவு உடையவர்கள் ஆதலின், குறிஞ்சிசில வளப்பத்திற்கு மூலகாரணம் முருகப் பெருமான் என்பதை உணர்கிருர்கள். அவனுடைய அருளால் குறிஞ்சி நிலத்தில் வளரும் பூக்கள் அவர்களுடைய அழகைப் பின்னும் எடுத்துக் காட்டுகின்றன. ஆதலின். உள்ள நிறைவு பெற்ற அவர்கள் குறிஞ்சிக்குத் தலைவனகிய முருகப் பெருமான சிக்னத்துத் துதிக் கிருர்கள். - அவன் தன் கையில் எடுத்திருக்கின்ற கோழியை அவர்கள் வாழ்த்துகிருர்கள். யாரேனும் ஒரு வீரனையோ, மன்னனேயோ வாழ்த்தும்போது பல வகையில் வாழ்த்து வது மரபு. அவனுடைய நாட்டை வாழ்த்தலாம்: கொடியை வாழ்த்தலாம். இங்கே குரர மகளிர் முருகப் பெருமானுடைய கோழிக் கொடியை வாழ்த்துகிருர்கள். அந்தக் கொடி பல போர்களில் பகைவர்களே அழித்த வெற்றியைக் காட்டிக்கொண்டு கிற்கிறது. முருகனுக்கு யாரையும் வஞ்சகமாக அழிக்கும் வழக்கம் இல்லை. நேரே நின்று தன்னுடைய வீரத்தைக் காட்டிப் போரில் வெற்றி