பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கூடாது? தானே முன் இதைப் பரிந்துரைத்து இப்போது அதை மாற்றிக்கொள்வானேன்? இத்தகைய வினாக்களுக்கு எனக்கு உடன் விடை கிடைக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகே அதன் உட்கிடை எனக்குப் புரிந்தது. இந்த இடத்தை அக் குழுமத்தின் உயர் நிலையில் உள்ள ஒருவரால் அவரைச் சார்ந்த ஒருவருக்குத் தர ஏற்பாடு செய்யப் பெற்றதென்றும், எக்காரணத்தாலும் அந்த ஏற்பாடு நடைபெறவேண்டும் என்றும் எனவே இதைமாற்ற ஏற்பாடுகள் நடைபெற்றன எனவும் அறிந்தேன். இது முறையோ இது தகுமோ இது.தருமந்தானோ' என நேரில் சென்று அவர்களிடம் முறையிட்டேன். அக் குழு மத்தின் நிருவாக உச்சியில் உள்ளவர் என்னை நேரில் வரச்சொல்லி, விட்டுக்கொடுக்குமாறு வேண்டினார்: நான் திட்டமாக மறுத்ததோடு, இந்த இடம் பற்றித் தில்லியிலுள்ள எங்கள் Logăr sp;551#655 (Centmal Board of Secondary Education) தெரிவித்தாகிவிட்டது எனவும் கூறினேன். எனினும் அவர் என்னை மிரட்டி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவேன் என்றும் வேண்டுமானாலும் மூன்றில் ஒரு பகுதியினை எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார். அவரிடம் வாதிடுவதில் பயனில்லை என்று கண்ட நான், நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என வெளி வந்துவிட்டேன். அவர் இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு சுமார் மூன்றில் ஒரு பகுதியினைத் (26 மனை 1765 ச. அடி) தரலாம் எனவும் அதற்கு நாங்களும் இசைவு தந்ததாகவும் வீட்டு வசதி வாரியத்துத் தலைவருக்கு 5.8.77-ல் ஒரு கடிதம் எழுத, அதற்கென ஒரு மறுப்பையும் நாங்கள் வாரியத்தலைவருக்கு 24.8.77.ல் எழுத நேர்ந்தது. அப்படியே 30.8.77-ல் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கும் கடிதம் எழுதினோம். ஆயினும் ஒரு திட்டமான முடிவுக்கு அவர்கள் வராமையாலும் எப்படியும் எங்களிடமிருந்து அந்த இடத்தினை எடுத்துக்கொள்வதே தங்கள் கருத்தாகச் செயலாற்றியமையாலும் நாங்கள் மேலிடத்துக்கு எழுத வேண்டிய கட்டமும் நேரில் சென்று விளக்கவேண்டிய