இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை
"ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்றும் பயிலும் சிறுவரே
நாடுகாக்கும் தலைவராய்
நாளை விளங்கப்போகிறார்"
என்று பாடியதோடல்லாமல், பிற்காலத்தில் நல்ல நாட்டை உருவாக்க, இன்றைய சிறுவர்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக் காகவே கவிதை, கதை, கட்டுரைகளை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள். அவர் களுடைய எட்டுக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, இப் புத்தகமாக வெளியிட்டுள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள சில கதைகள் கோகுலம் மாத இதழில் வெளிவந்தவை. அந்தக் கதைகளை இப்புத்தகத்தின் மூலமாக வெளியிட அனுமதி தந்த பரதன் பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குழந்தைக் கவிஞரின் மற்ற நூல்களைப் போலவே இந்நூலையும், சிறுவர்கள் விரும்பிப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறோம்.
-பதிப்பகத்தார்