பக்கம்:திருவடி மாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார் 21

குற்றக் கலமா யுளவடியேன்
குறைவேண் டுவது முறையோதான்
தெற்றத் தெளிந்த சடகோபர்
தெவிட்டா தருந்துந் தெள்ளமுதே.

53. அரனைப் படைக்குந் திசைமுகனை
யலரிற் படைக்குந் திருநாபி
வரனைப் படைக்கு மனப்பெரியார்
மலர்ந்த செழுந்தா மரைப்பதத்துச்
சிரனைப் படைக்க மாட்டாத
தேகம் படைக்குந் தீயவினை
மரனைப் படைத்து வளர்க்கின்ற
மதியைப் படைத்தேற் கருளுளதோ.

54.காலமெலாங் கணிகையரிற் கழித்துமூத்த
காரிகையாள் காந்தனைப்பின்
காணலுற்றுச்
சீலமெலாஞ் கிறந்தகுணத் தெரிவை யொப்பச்
செய்தபிழை பொறுக்கவென்று செப்பல் போல
வாலமெலாந் திரண்டனையேனந்தோ
வாசைக்
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வை யோவறியேன் பெற்ற தேவே.

55. கிளையெலா நச்சுக் கனிபழுத் திருக்குங்
கெட்டதீ மரத்தையும் வித்து
முளையெலாங் கெடுத்துப் புனலெலாம் வீணாய்
முடித்துநல் லெருவெலாந் தீத்துக்
களையெலாம் விளைக்குங் களரையு மனையேன்
காண்பனோ நின்னையு மாயர்
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வநா யகனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/23&oldid=1319223" இலிருந்து மீள்விக்கப்பட்டது