ரா.இராகவையங்கார்
25
66.துருவ னுக்குயர் நிலைகொடுத்தன
துருப தைக்கவிழ் துகில்வ ளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்
ஒருவ னுக்கெழில் வளைதரித்தன
வுரைக ரிக்குயர் கதிப டைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமைகேளவன்
சருவ னுக்கிர வொழிய விட்டன
தசமு கற்கடு கணைதொ டுத்தன
சகல ருக்குநல் வரம்வி.ளைப்பன வடிநீழன்
மருவெ னக்கிக பரம வளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரையெ னத்தரு தருவெ னப்படு புயமாதோ.
67.முறைக டந்து பிறர்ம டந்தை
முலைபு ணர்ந்த பழுதெலாந்
தறைகி டந்து புனல்ப டிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறைகி டந்த செனனம் விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறைக டந்த வரமு குந்த
மனமி ரங்கி யருள்வையே.
68.தானே வழங்க வறியாத
சலவா ரியையுன் றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந் தன்னை நல்க லிலா
வானே வளருங் கற்பகமா
மரத்தை நினக்கொப் புரைப்பதையுங்
கோனே நினையுந் தொறுமெனது
கொடிய மனமுங் குலைவுறுமே.