பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266


பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும் பயன்.

(திருமந்திரம்-132)

எனவும்

ஏற்றி விறக்கி யிருகாலும் பூரித்துக்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை யுதைக்கும். குறியது வாமே.

(௸-571)

எனவும்

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல்லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே.

(௸-801)

எனவும்

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்புத்து மூவரும் தோன்றுவர்
சாவதுமில்லை சதகோடியூனே.

(௸-803)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்களில் விரித்து அருளிச் செய்துள்ளமை காணலாம். இங்கு எடுத்துக் காட்டப் பெற்ற திருமந்திரப் பாடல்கள் மக்கள் மரணமிலாப் பெருவாழ்வினைப் பெறுதற்கு இன்றியமையாத சாகாக் கல்வியின் விளக்கமாக அமைந்துள்ளமை அறிஞர்களால் ஊன்றி நோக்கற் பாலதாகும்.

சைவ சமயகுரவர் நால்வரும் தாம் பெற்றிருந்த ஊனுடம்பு இறைவன் திருவருளால் மாயா காரியமாகிய