பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக்குடில் பதிப்புரை

கவிஞர்கோ கோவை. இளஞ்சேரனாரின் நூல்களை மலர்த்துவது கலைக்குடில். திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை’ பத்தாவது வெளியீடு.

நூல் விற்பனைக்களம் தொய்வுபட்டுள்ளது; புதுவெளி யீடுகளில் கதை, கவர்ச்சி, கமுக்க நூல்கள் ஆட்சி செலுத்து கின்றன. ஆய்வு நூலென்றால் பாய்ந்து ஒடுவோரைக் காண்கின்றோம். இந்தக் கம்பலையில் நெறி வாய்ந்த படிப்பாளர்கள் வரவேற்கும் நூலை வெளியிட வேண்டி யுள்ளது. இந்நூலும் அவ்வாறே.

பதிப்பார்ந்த டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரையும், இனிய நண்பர் திரு. அருண் அவர்களின் அன்பளிப்பும், ந. இர. இரத்தினகிரி, ந. பி. சிவானந்தம் ஆகியோரின் பங்களிப்பும் நூற் சிறப்பிற்கும், பதிப்பிற்கும் தோள்கொடுத்தன. நெஞ்சார்ந்த நன்றி படைக் கின்றோம்.

நூற்பதிப்பில் கவனங்கொண்டு கைகொடுத்த இளவல் திரு. ப. முருகையன், சென்னை ஓவியர் ந. சமால், சென்னை வெற்றி அச்சகத்தார் முதலியோர் பாராட் டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

பகுத்தறிவாளர்க்கு உந்து முனையாக, படிப்பாளர்க்கு ஊட்ட உணவாக, அறிவாளர்க்குச் சாணைக்கல்லாக, இந்நூல் வரவேற்பில் மிளிரும்,

58, எழில் நகர் கலைக்குடில் தஞ்சாவூர்-613007 வெளியீட்டகத்தார்.