பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் உருகிப்பெருகி உளம்குளிர முகந்து கொண்டு பருகற்கினிய பரம்கருணைத் தடம் கடலை மருவித் திகழ் தென்னன் வார்கழலே நினைந்து அடியோம் திருவைப் பரவி நாம் தெள்ளேனம் கொட்டாமோ (15) புத்தன் புரந்தராதி அயன் மால் போற்றி செயும் பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேனம் கொட்டாமோ (16) உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக் கெடுத்துக் கழல்இணைகள் தந்தருளும் செயலைப் பரவி நாம்தெள்ளேனம் கொட்டாமோ (17) 428