பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றுஆலின் கீழ்இருந்து அங்கு அறம்உரைத்தான் காண் - 5J le அன்றுஆலின் கீழ்இருந்துஅங்கு அறம்உரைத்தான் ஆயிடினும் கொன்றான்காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ (16) அம்பலத்தே கூத்துஆடி அமுதுசெயப் பலிதிரியும் நம்பனையும் தேவன்என்று நண்ணும்.அது என் ஏடி நம்பனையும் ஆமாகேள் நான் மறைகள் தாம் அறியா எம்பொருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ (17) சலம்உடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்ஆழி நலம்உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடி நலம்உடைய நாரணன்தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ் அலர்ஆக இடஆழி அருளினன் காண் சாழலோ (18) 446