பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருத்தோள் நோக்கம் தீதுஇல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச் சாதியும் வேதியன்தாதைதனைத் தாள் இரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம் (7) மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லிர் வானம் தொழும்தென்னன் வார்கழலே நினைந்துஅடியோம் ஆனந்தக் கூத்தன் அருள்பெறின்நாம் அவ்வணமே ஆனந்தம் ஆகிநின்று ஆடாமோ தோள்நோக்கம் (8) எண்உடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன்பின் எண்இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோள்நோக்கம் (9) 486