பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினாறாவது திருப்பொன் ஊசல் அருட்சத்தி (தில்லை) (ஒப்புமை பற்றிவந்த ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா) சீர்ஆர் பவளம்கால் முத்தம் கயிறுஆக ஏர்ஆரும் பொன்பலகை ஏறி இனிதுஅமர்ந்து நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய்அடியேற்கு ஊர்ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப் போரார்வேல் கண்மடவீர் பொன்ஊசல் ஆடமோ (i) மூன்றுஅங்கு இலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களும் காணா மலர்அடிகள் தேன்தங்கித் தித்தித்து அமுதுஊறித் தான்தெளிந்துஅங்கு ஊன்தங்கி நின்றுஉருக்கும் உத்தரகோசமங்கைக் கோன்தங்கு இடைமருது பாடிக் குலம்ஞ்ஞ்ை போன்று அங்கு அனம்நடையீர் பொன்ஊசல் ஆடாமோ (2)