பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. குயில் பத்து கார்உடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழும் குயிலே சீர்உடைச் செம்கமலத்தில் திகழ்உரு ஆகிய செல்வன் பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனை ஆண்ட ஆர்உடை அம்பொனின் மேனி அமுதினை நீ வரக்கூவாய் (9) கொந்து,அனவும் பொழில் சோலைக் கூம்குயிலே இது கேள் நீ அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்ட ருளும் செம்தழல் போல் திருமேனித் தேவர் பிரான் வரக் கூவாய் (10) -52D