பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து நான்காவது அடைக்கலப் பத்து பக்குவ நிண்ணயம் (திருப்பெருந்துறை) கலவைப் பாட்டு செழுக்கமலத் திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் புழுக்கண் உடைப் புன்குரம்பை பொல்லாக் கல்விஞானம் இலா அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே வெறுப்பன வேசெய்யும்என் சிறுமையைநின் பெருமையினால் பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைச் செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 535 (1) (2)