பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திருக்கழுக்குன்றப் பதிகம் பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண் சரண் ஆம் என காதலால் உனை ஒத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே மயக்கம் ஆயது.ஒர் மும்மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும் துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூமலர்க் கழல் தந்து எனைக் கயக்க வைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 650 (7)