பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை உங்கையில்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள்பெருமான் உனக்குஒன்று உரைப்போம் கேள் எம்கொங்கை நின்அன்பர் அல்லார் தோள் சேரற்க எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம்கண் மற்று ஒன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு எல்ஓர் எம்பாவாய் (19) போற்றி அருளுக நின்ஆதிஆம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தம்.ஆம் செம்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம்ஆம் பொன்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகம்ஆம் பூம்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறுஆம் இணை அடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழிநீர்ஆடு ஏல்ஒர் எம்பாவாய் (20) 362