பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. திருவேசறவு பஞ்சுஆய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சுஆய துயர்கூர நடுங்குவேன் நின்அருளால் உய்ஞ்சேன்எம் பெருமானே உடையானே அடியேனை அஞ்சேல்என்று ஆண்டவாறு அன்றே அம்பலத்து அமுதே என்பாலைப் பிறப்பு:அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய ஒண்ணுத் தென்பாலைத் திருப்பெருந் துறைஉறையும் சிவபெருமான் அன்பால்நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது என்பாலே நோக்கியஆறு அன்றே எம்பெருமானே மூத்தானே மூவாத முதலானே முடிவுஇல்லா ஒத்தானே பொருளானே உண்மையும்ஆய் இன்மையும்ஆய் பூத்தானே புகுந்துஇங்குப் புரள்வேனைக் கருணையிஞல் பேர்த்தேநீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே 730 (6) (7) (8)