பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தொன்றாவது அற்புதப் பத்து அனுபவம் ஆற்றாமை (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் மையல் ஆய்இந்த மண்ணிடை வாழ்வுஎன்னும் ஆழியுள் அகப்பட்டுத்தைய லார்எனும் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே பொய்எலாம்விட திருவருள் தந்துதன் பொன்அடி இணைகாட்டி மெய்யன் ஆய்வெளி காட்டிமுன் நின்றது ஒர் அற்புதம் விளம்பேனே (s) ஏய்ந்த மாமலர் இட்டு முட்டாதது.ஒர் இயல்பொடும் வணங்காதே சாந்தம் ஆர்முலைத் தையல்நல்லாரொடும் தலைதடு மாறுஆகிப் போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொன்கழல் இணை காட்டி வேந்தன்ஆய் வெளியே என்முன் நின்றது.ஒர் அற்புதம் விளம்பேனே (2) 755