பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து நான்காவது எண்ணப் பதிகம் ஒழியா இன்பத்து உவகை (தில்லை) ஆசிரிய விருத்தம் பார்உரு ஆய பிறப்பு:அற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீர்உரு ஆய சிவபெரு மானே செம் கமல மலர்போல ஆர்.உரு ஆயஎன் ஆர்.அமு தேஉன் அடியவர் தொகை நடுவே ஒர்உரு ஆயநின் திருவருள்காட்டி என்னையும் உய்யக் கொண்டருளே (1) உரியேன் அல்லேன் உனக்குஅடிமை உன்னைப் பிரிந்துஇங்கு ஒருபொழுதும் தரியேன் நாயேன் இன்னதுஎன்று அறியேன் சங்கரா கருணையினால் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுஉன் பெய்கழல் அடிகாட்டிப் பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே (2) 786