பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. திருவெண்பா மூவரும் முப்பத்து மூவரும் மற்றுஒழிந்த தேவரும் காணாச் சிவபெருமான்-மாஏறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும் ro) இருந்துஎன்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்துஇரந்து கொள்நெஞ்சே எல்லாம்-தரும்காண் பெருந்துறையில் மேய பெரும்கருணை யாளன் மருந்துஉருவாய் என்மனத்தே வந்து (10) இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வுஅறுத்து சோதி ஆய்-அன்புஅமைத்துச் சீர்ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊர்ஆகக் கொண்டான் உவந்து (11) 374