பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தெட்டாவது பண்டு ஆய நான்மறை (பண்டாய நான்மறை) அனுபவத்துக்கையமின்மையுரைத்தல் (அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்) (திருப்பெருந்துறை) நேரிசை வெண்பா பண்டுஆய நான்மறையும் பால்அணுகா மால் அயனும் கண்டாரும் இல்லை கடையேனைத் - தொண்டுஆகக் கொண்டருளும் கோகழிஎம் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மாறு உரை (1) உள்ள மலம்மூன்றும் மாய உகுபெரும்தேன் வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்த கருவும் கெடும்பிறவிக் காடு (2) B20