பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி என்அணி ஆர்முலை ஆகம் அளைந்துஉடன் இன்புறும் ஆகாதே எல்லைஇல் மாக்கரு னைக்கடல் இன்றுஇனிது ஆடுதும் ஆகாதே நல்மணி நாதம் முழங்கிஎன் உள்உற நண்ணுவது ஆகாதே நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே மன்னிய அன்பரில் என்பனி முந்துற வைகுவது ஆகாதே மாமறையும்அறி யாமலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே இன்இயல் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவது ஆகாதே என்னை உடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே (4)