பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்குஅறும் ஆகாதே வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே கண்இலி காலம் அனைத்திலும் வந்த கலக்குஅறும் ஆகாதே காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே பெண்அலி ஆண்என நாம்என வந்த பிணக்குஅறும் ஆகாதே பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே எண்இலி ஆகிய சித்திகள் வந்துஎனை எய்துவது ஆகாதே என்னை உடைப்பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே 835 (5).