உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாளர் தேசீயம்பிள்ளை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ரத்தபானமா?- தேசீயம்பிள்ளை அலறிவிட்டார். ஆமாம் - இது கல்லக்குடி பானம்! அது தூத்துக் குடிச்சாறு! இது சேலத்து ரசம்! அது வால்பாறை யில் பிழிந்தெடுத்தது!- என அடுக்கிக் கொண்டே போனான் தளபதி. தேசீயம்பிள்ளையால் நிற்க முடியவில்லை. தளபதி கலகலவெனச் சிரித்தான். ஏன் திகைக்கிறீர்? எல்லாப் பானங்களுமே உமது நாட்டில் தயாரித்ததுதானே! வெளிநாட்டுச்சரக்கு என்று எண்ணுகிறீரா? இல்லை; உமது சொந்த நாட்டுச் சரக்குதான்! சிறுதுளிகளாவது அருந் தும்! - தளபதி மிகவும் பிடிவாதப்படுத்தினான். வேண்டாம் பூமாதேவியைக் குளிப்பாட்டுவதற்காகத் தயாரித்த புண்ணிய தீர்த்தம் இது! இதை இங்கே பானமாக அருந்துவது என்றால் எப்படி முடியும்? -தேசீயம்பிள்ளை கொஞ்சம் கோபத்தோடு பதில் கூறினார். தளபதி விடவில்லை. எமலோகத்தில் நடைபெறும் உபசாரத்தை சரிவர ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? தேசீயம்பிள்ளை விழித்தார் ! பூலோகத்தில் ஆரம்ப ஆசிரியர்களாகப் பிறக்க வேண் டும் !