பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

திருவிளையாடற்புராணம்


ஏவலரை அனுப்பி அவ்இசை வல்லவனைச் சேரன் யானை மீது ஏற்றி அழைத்து வந்தான். வந்த விருந்தினரை மாளிகையில் தங்கவைத்து உணவு தந்து உபசரித்தபின் பொன்னறையைத் திறந்து காட்டி "பாணபத்திரரே! செல்வம் முழுவதும் நீர் காண இங்கு வைத்திருக்கிறேன்; மேகம் நாணயாம் தரும் செல்வம் அனைத்தும் நீவிர் எடுத்துக் கொள்ளலாம்" என்றார். அவர் தமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சியதை அங்கு விட்டுவைத்து வீடு திரும்பினார். தம்மை நாடி வந்த புலவர்க்கும், கூடி மகிழும் சுற்றத்தவர்க்கும், வாடி வருந்தும் அறிஞர்க்கும், கேடு நீங்கிய நல்லோருக்கும் தந்து பங்கிட்டு வளமாக வாழ்ந்தான். 

43. பலகையிட்ட படலம்

பாணபத்திரன் செல்வம் வந்தபோதும் அவன் சிவனை வணங்குவதில் குறைந்தது இல்லை; நடு இரவிலும் சென்று யாழிசை மீட்டு நாதனைப் பாடுவதில் சலிப்பு அடைந்ததில்லை. சிவனார் நள்ளிரவில் முத்துச் சிவிகையில் ஏறி யாழிசை கேட்டுக் கொண்டு திருப்பள்ளியறைக்கு எழுந்தருளினார். அங்கே நாதன் தாள் வாழ்த்திப் பாணபத்திரன் பாடிக் கொண்டே இருந்தான். அடாது மழை பெய்தாலும் விடாது பாடுவது அவன் வழக்கமாக இருந்தது. அவன் தீவிர ஈடுபாட்டையும், பாடும் இசைப் பாட்டையும் மக்களும் நாடும் அறியவேண்டும் என்பதற்கு ஒரு நாள் நள்ளிரவில் கொள்ளை மழை பெய்வித்தார். பள்ளத்தில் நீர் நின்றாலும் அதை உள்ளத்தில் கொள்ளாது நின்று நிலைத்துப் பாடிக் கொண்டேயிருந்தார்.

பகை ஒன்று இட்டு அவரை அதில்அமர்ந்து பாட வைத்தார்; இறைவன் தந்த பலகை அவனைப் பள்ளத்தில்