உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுழைவுரை

ix

மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களை யெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக்கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக் கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள் வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதிகளாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக்கட்டளை வழங்கியுள்ளனர். தொகுதி 1

1) முதற் குலோத்துங்க சோழன்

1930

2) திருப்புறம்பயத் தல வரலாறு

1946

3) காவிரிப் பூம்பட்டினம்

1959

4) செம்பியன் மாதேவித் தல வரலாறு

1959

தொகுதி 2

5) பாண்டியர் வரலாறு

1940

தொகுதி 3

6) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1

1949

தொகுதி 4

7) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2

1951

தொகுதி 5

8) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3

1961