உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

87


பட்டம் எய்தியவன் என்பது கூரத்துச் செப்பேடுகளால் அறியப் படுகின்றது. (South Indian Inscription 1 Page 154) கி.பி. 830முதல் 854 வரையில் ஆட்சிபுரிந்த தெள்ளா றெறிந்த நந்திவர்மன் விடேல்விடுகு என்ற பட்ட முடையவன் என்பது நந்திக் கலம்பகத்தால் புலப்படுகின்றது. இவனது தந்தையாகிய தந்திவர்மனே மற்பிடுகு என்னும் பட்டத்துடன் நிலவியவன். எனவே கி.பி.785ஆம் ஆண்டில் திருவெள்ளறையில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் அமைக்கப்பெற்ற மாற்பிடுகு பெருங்கிணறு கி.பி. 780முதல் 830 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்தி வர்மனது பட்டப் பெயரால் அக்காலத்தில் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு வெளியாதல் காண்க.

II
இராசராசன் கிணறு

இராசராசன் கிணறு என்பது காஞ்சிமா நகரிலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் பெருவழியில் மாமண்டூருக்குத் தெற்கே ஐந்துகல் தூரத்திலுள்ள உக்கல் என்ற ஊரில் மேலைப் பெருவழியிலுள்ளது. இக்கிணற்றின் வரலாற்றை அவ்வூரிலுள்ள புவனி மாணிக்க விஷ்ணு கிரகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு நன்கு விளக்குகின்றது. அதனை அடியிற் குறிக்கின்றேன்.

1. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியுந் நுளம்ப பாடியுந் தடிகைபா

2.டியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட் டொழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டப்பாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற்

3. கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேஸரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்குயாண்